நிச்சயமாக திறம்பட செயல்படுவேன் என அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட பின்னர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட பின்னர் முதன்முறையாக தலைமைச் செயலகம் வந்த டி.ஆர்.பி.ராஜா, தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லாருக்கும் எல்லாம் என்கின்ற நோக்கத்துடன் தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் 1 மாநிலமாக அமைத்திட அனைத்து விதத்திலும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை டெல்டாவில் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு. அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
முதலமைச்சர் வழிகாட்டுதலில் எந்தவொரு பணியாக இருந்தாலும் திறம்பட செயல்படுவேன்.
இவ்வாறு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.