கூடலூர் அருகே யானை உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக யானையின் காதில் மர்ம நபர்கள் தீவைத்த, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மசினகுடி பகுதியில் காயங்களுடன் சுற்றித் திரிந்த ஒற்றை ஆண் காட்டு யானை, காதில் ரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக உயிரிழந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், யானை மீது மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, யானைக்கு தீவைத்து கொடுமைப்படுத்தியவர்கள் குறித்து தனிப்படை அமைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மசினகுடி பகுதியில், மூன்று பேர் டயரில் தீயை பற்றவைத்து, யானையின் காதில் வீசிய வீடியோ வெளியாகியுள்ளது. காதில் தீப்பற்றி எரிந்த நிலையில், காட்டு யானை ஓலமிடும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய வனத்துறையினர், தீ வைத்து யானையின் இறப்பிற்கு காரணமாக இருந்த மூவரில் 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரையும் தேடி வருகின்றனர்.