சென்னையில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டரை டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததோடு இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட 2 மூட்டை குட்கா இருந்ததை அடுத்து, ஆட்டோவில் வந்த வியாசார்பாடியை சேர்ந்த சதீஷ்குமார், நாகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, ஓட்டேரி பகுதியில் உள்ள குடோனில் குட்காவை பதுக்கி வைத்து, சென்னை முழுவதும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், குடோனில் பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 800 கிலோ குட்கா மூட்டைகளை பறிமுதல்
செய்து இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.