குஜராத்தில் நடைபெற்று வரும் முதல் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து இந்த தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். அதன்படி குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ராஜ்கோட்டில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் வாக்களித்தார்.
குஜராத்தில் வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து முதல் கட்ட தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி 18.95 % வாக்குகள் பதிவாகியிருந்தது. நண்பகல் 1 மணி நிலவரப்படி 34.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.