தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வரும் கருத்துகள் அனைத்துமே தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, சனாதனம் குறித்து பேசி வருவது என அவர் எந்த விசயம் குறித்து பேசினாலும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்துகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று கூறியது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி முடிவதற்குள், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அதோடு திமுக அரசு மீது அதிமுக, பாஜக தரப்பில் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லி சென்றுள்ள அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என அதிமுக மனு அளித்த நிலையிலும், அமைச்சராக தொடர தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஆளுநர் இந்த டெல்லி பயணத்தை மேற்கொண்டுள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் ஜூன் 27 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
- பி.ஜேம்ஸ் லிசா