நாமக்கல் – திருச்சி சாலை அரசினர் மகளிர் கலை கல்லூரி மாணவிகளிடம் அதிகளவு வசூல் செய்ததாக கல்லூரி முதல்வர் மீது குற்றம் தெரிவித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாணவிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் – திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி
செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக பால் கிரேஸ் என்பவர் பணியாற்றி
வருகிறார். கல்லூரியில் தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் பால் கிரேஸ், கெளரவ விரிவுரையாளர் மூலம் ரெக்கார்ட் நோட்புக்,
ஜெராக்ஸ் , அடையாள அட்டை வழங்குவது, தேவை இல்லாமல் அபராதம் வசூல் செய்வது
உள்ளிட்ட காரணங்களுக்கு ரூ.300 வரை வசூல் பெற்றதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கல்லூரி முதல்வர், தங்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாக மாணவிகள் குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து, மாணவிகள் அனைவரும் கல்லூரி நுழைவு வாயில் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் சக பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என
கூறியதை தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.
– ம.ஶ்ரீ மரகதம்