பொங்கல் சிறப்பு தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்தே நேரடியாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இரண்டு கோடியே 15 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் தொடங்கியது. 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்புகளை நேரடி கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தெளிவான வழிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் 33 ரூபாயாக இருக்க வேண்டும் என்றும், கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து, எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது. இந்த வருடம் கரும்பு கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைவிட கூடுதகாக விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
கரும்பு கொள்முதல் செய்யும்போது அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து, நேரடியாகவோ 10% வேளான் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.