மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு பிரிவினை அரசியல் செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றில் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் திருச்சி மேல சிந்தாமணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, போராட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், கர்நாடக அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு இதில் முழு கவனம் செலுத்தி மத்திய அரசுடன் இணைந்து அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அண்மைச் செய்தி: மானுட மாமேதை கார்ல் மார்க்ஸின் 139-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
மேலும், இந்த போராட்டம் அரசியல் காரணத்திற்காக நடைபெறவில்லை என்று தெரிவித்த அவர், போராட்டத்தில் தொடங்கி, போராட்டத்திலேயே பயணிக்கிற இயக்கம்தான் அமமுக என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காமல் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.