பாராலிம்பிக்கில் வெள்ளிவென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மாரியப்பன் தனக்கு அரசாங்க வேலை வழங்கவேண்டுமென நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வழியாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன் எதிரொலியாக, அவருக்கு தற்போது தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பணி ஆணையை பெற்ற பின்னர், செய்தியாலர்களை சந்தித்த மாரியப்பன் தங்கவேல் “எனது கோரிக்கையை ஏற்று பணி வழங்கிய முதல்வருக்கும், துணை நின்ற அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.