மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்புடைய 1.8 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. எமர்ஜென்சி லைட்டிற்குள் தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை கைது…

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சம்
மதிப்புடைய 1.8 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

எமர்ஜென்சி லைட்டிற்குள் தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்த பெண் பயணியை
சுங்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது ஒரு பெண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை
நிறுத்தி அவருடைய உடைமைகளை சோதனையிட்டனர். அவருடைய சூட்கேஸுக்குள் புதிய எமர்ஜென்சி லைட் ஒன்று இருந்தது.

அந்த அதிகாரிகள் அந்த எமா்ஜென்சி லைட்டை எடுத்து பார்த்த போது, அது வழக்கத்தை
விட அதிக கனமாக இருந்தது. இதை அடுத்து அந்த விளக்கை கழட்டி பார்த்து
சோதித்தனா். அதனுள் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

எமா்ஜென்சி லைட்டிற்குள் 1.8 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை
கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 80 லட்சம். இதை அடுத்து சுங்க
அதிகாரிகள் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.மலேசிய நாட்டிலிருந்து தங்கத்தை
நூதனமான முறையில் கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்து, அவரிடம் மேலும்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.