32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் குற்றம்

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம்; சுங்கத்துறை பறிமுதல்…

இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து படகில் மர்ம பொருள்
கொண்டு வரப்படுவதாக ராமநாதபுரம் உதவி சுங்கத்துறை ஆணையருக்கு தகவல் கிடைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருப்புல்லாணி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த சல்மான்கான் என்ற இளைஞரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டபோது, அவரிடமிருந்து சுமார் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
செய்யப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் 5 கோடி என கூறப்படுகிறது. சல்மான்கானை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கம் கடத்தல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஸ்கேட்டிங் சாதனை மேற்கொண்ட இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy

கரூரில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Web Editor

9 உயிர்களை பலி வாங்கிய மதுரை சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்து; நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சித் தகவல்…

Web Editor