சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
இதனையடுத்து, தங்கம் விலை நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.149-க்கு விற்பனை செய்யப்படுகிறது.







