பெண் ஒருவர் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு முன்பு மெழுகுவர்த்திக்கு பதிலாக, மொபைல் கேமரா ஃப்ளாஷ்களை ஊதி அணைத்து கேக் வெட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிறந்தநாள் அன்று, கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி அதை ஊதிவிட்டு, பின்பு கேக் வெட்டி அதை ஊட்டிவிட்டு மகிழ்வது நமது வாழ்வில் ஒவ்வொரு வருடத்தின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் சிலரோ, மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பதற்கு பதிலாக, ஒரு
நேர்மறையான சிந்தனையோடு விளக்குகளை ஏற்றி கேக் வெட்டி பகிர்ந்து கொள்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்வு அதையும் தாண்டிய விஷயமாக ‘டிஜிட்டல் மெழுகுவர்த்தி’ பாணியில் மொபைல் கேமரா ப்ளாஷ்களை
ஊதியனைத்து பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், கேக்குடன் மெழுகுவர்த்தியை வாங்க மறந்ததால் தான் அந்த பெண்ணின் நண்பர்கள் அனைவரும் இணைந்து அதற்கு பதிலாக, அவர்கள் மொபைல் கேமரா ஃப்ளாஷ்களை ஆன் செய்து அந்த பெண்ணை டிஜிட்டல்
மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக ‘ப்ளோ அவுட்’ செய்ய வைத்து கேக் வெட்டிய கொண்டாடினார்களாம்.
கடந்த மார்ச் 13 அன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளதோடு, மக்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா