சர்வதேச சந்தையில் எரிவாயு விலை ஏற்றம் தான் இந்தியாவிலும் சிலிண்டர் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து விலையேற்றம் கண்டு வரும் சமையல் விரிவாயு சிலிண்டர் காரணமாக ஏழை மக்களுக்கு கடும் சுமை ஏற்பட்டிருப்பது குறித்து மத்திய அரசு கவனம் கொண்டு இருக்கிறதா என மக்களவையில் திமுக உறுப்பினர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாடு முழுவதும் தற்பொழுது 14.2 கிலோ மற்றும் 5 கிலோ சிலிண்டர்களில் சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் நிதி ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக 816.28 கோடி சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகப்பட்டிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 64.53 கோடி சிலிண்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: 2023 பிப்ரவரி மாதம் 1-ம் தேதி நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1053 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சமையல் எரிவாயுக்களைப் பொருத்தவரை 60% இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் ஒரு மெட்ரிக் டன் 454 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் 2021 -2022 ம் நிதியாண்டில் அது 693 அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் மேலும் இந்த தொகை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் இழப்பை சரி செய்ய ரூ.22,000 கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.