கரூரில், 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு காந்தி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று கரூர்
மாநகராட்சிக்குட்பட்ட பழைய திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள அரசு
அருங்காட்சியகத்தில் காந்திஜியின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட தொகுப்புகள்
அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. இன்று துவங்கி மார்ச் 1ம் தேதி வரை நடைபெறும்
இந்த கண்காட்சியை மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பழைய திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள அரசு
அருங்காட்சியகத்தில் காந்திஜியின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட தொகுப்புகள்
அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. இன்று துவங்கி மார்ச் 1ம் தேதி வரை நடைபெறும்
இந்த கண்காட்சியை மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்பட கண்காட்சியில் , மகாத்மாக காந்தி சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்தது முதல் அவர் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது வரை,தொழுநோயாளிகளுக்கு காந்தியடிகள் மருந்துகளை தன் கைகளால் நோயாளிகள் உடலில் தடவும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் 100 க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மவுண்ட்பேட்டன் பிரபு, முகமது அலி ஜின்னா, சிறுமி இந்திரா காந்தி, உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் காந்திஜி கலந்து கொண்டது குறித்த அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. காந்திஜியின் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சியை பார்வையிட வந்த கரூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் மணிமுத்து ஒவ்வொரு புகைப்படங்கள் குறித்தும் விளக்கிக் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.