உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
6 வார கால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதி மன்றம் இன்று செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முதலாவதாக நாடு முழுவதும் பெரிதாக பேசப்படும் ஒன்றான மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள், ஆண்களுக்காக தேசிய ஆணையம் அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு போன்ற முக்கிய வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்த்திரசூட் அறிவித்தார். அதனால் உச்சநீதிமன்றத்தில் உள்ள முதல் 5 அறைகள் இலவச வைஃபை சேவையுடன் இருக்குமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்துள்ளார்.
மேலும் ஆவணங்கள் மற்றும் சட்ட புத்தகங்கள் எந்த நீதிமன்ற அறைகளிலும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனி இருக்கும் அனைத்து நீதிமன்ற அறைகளும் வைஃபை சேவையுடன் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார். இந்த இலவச வைஃபை சேவையை வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனுதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







