32.7 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் வணிகம்

ரூ.2000-ஐ நோட்டை திரும்ப பெறும் முடிவுக்கு முன்னாள் பொருளாதார ஆலோசகர் ஆதரவு..!!

2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் முடிவுக்கு முன்னாள் பொருளாதார ஆலோசகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.  2016 – 2017ம் நிதியாண்டில் 354 கோடியே 29 லட்சம் அளவிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

2019-20ம் நிதியாண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது.  2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 3.62 லட்சம் கோடியாக குறைந்தது.

2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நிலையில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான முனைவர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக வெளியான அறிவிப்பு வரவேற்க கூடிய ஒன்று என தெரிவித்துள்ளார். மேலும் 2000 ரூபாயை நோட்டை திரும்ப பெற்றதற்கான முக்கியமான ஆறு முக்கியமான காரணங்களை குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.2000 நோட்டினை திரும்ப பெற்றதற்கான  முக்கிய காரணங்கள் :

– வருமான வரி சோதனை மற்றும் பண மோசடி சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பெரும்பானமையான பணங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் முதன்மையானவையாகும்.  

– பண பரிவர்த்தனைகளுக்கு 2,000 நோட்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படாததால் இந்த நடவடிக்கை சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது.

-பணமதிப்பிழப்பிற்கு பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் ரூபாய் நோட்டுகளின் பங்கு அதிலும் குறிப்பாக ₹ 2,000 நோட்டுகளின் பங்கு குறைந்துள்ளது.

– 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு மக்களிடையே 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறையத் தொடங்கியது. 

– டிஜிட்டல் பணபரிவர்த்தனை இன்னும் மூன்று வருடங்களில் மூன்று மடங்கு உயர வாய்ப்புள்ளதாக பிசிஜி யின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மேலும் குறைய வாய்ப்புண்டு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading