திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.-வாக இருந்தவர் கு.க.செல்வம். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைந்ததையடுத்து, அந்த பதவி கு.க.செல்வத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து திமுகவில் இருந்து விலகிய கு.க.செல்வம், 2021 ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சிறிது காலத்திற்கு பின்னர் மீண்டும் திமுகவுக்கு திரும்பிய கு.க.செல்வத்திற்கு, ஏற்கனவே அவர் வகித்த தலைமை நிலைய செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த கு.க.செல்வம், உடல்நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.