இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றி உலகளவில் புகழ்ப் பெற்ற புல்லாங்குழல் கலைஞர் நவீன் குமாருக்கு அமெரிக்காவின் ஜனாதிபதி அலுவலகம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாம்பே திரைப்படத்தின் பாடல்கள் பல ஆண்டுகளை கடந்தும், இன்று கேட்டாலும் ரசிக்காத உள்ளங்களே இருக்க முடியாது. இதில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்த போதிலும், ‘பாம்பே தீம் மியூசிக்’ என சொல்லப்படக்கூடிய பின்னணியில் வரும் இசைக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு. காரணம் மத கலவரத்தின் வலியையும், வேதனையையும் அந்த இசை நம் செவிகளின் வாயிலாக நெஞ்சுக்குள்ள புகுத்தி ரணங்களை ஏற்படுத்தியதோடு, குறிப்பாக அதில் வரும் புல்லாங்குழல் இசையை கேட்கும் போது நிச்சயம் நம் கண்களில் கண்ணீரும் வரும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்படிப்பட்ட அந்த உருக்கமான புல்லாங்குழல் இசைக்கு சொந்தக்காரர் தான் நவீன் குமார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த புல்லாங்குழல் கலைஞரான இவர், 1984 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜாவால் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர் ஆவார். பின்னர் ‘ரோஜா’ படத்தில் துவங்கி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பயணிக்க துவங்கிய இவர், கிட்ட தட்ட 30 வருடங்களாக அவருடன் நட்பு பாராட்டி வருவதோடு 25000-திற்கும் அதிகமான பாடல்களில் பின்னணியில் பணியாற்றி சாதனை படைத்த வரும் ஆவார். இதற்காக இவருக்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகள் கிடைத்துள்ள நிலையில், இவரது திறமையை மேலும் பாராட்டும் வகையில் அமெரிக்க அரசு சார்பாகவும் இவருக்கு தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அலுவலகத்தில் இருந்து இவரின் சேவைகளை பாராட்டி ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளதோடு, வாழ்நாள் சாதனையாளர் விருதும் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை முறையே மேரிலாந்து மாநில உயர்கல்வி செயலர் டாக்டர் சஞ்சய் ராய் மாற்றும் மேரிலாந்தின் உள்ளூர் அரசாங்கத்தின் பிரதிநிதி திருமதி டெபியின் ஆகியோர் வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விருதுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நவீன் குமார், இது தனது வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றும், எனக்கு வாய்ப்புகள் தந்து
என்னை இப்படி ஆக்கிய அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளதோடு, இந்தியாவுக்கும், இந்திய இசைத் துறைக்கும் இத்தகைய கெளரவமான விருதைப் பெற்று தந்ததில் பெருமைக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா