வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கில் நீர்வளம், வருவாய், பொதுப் பணி, நகராட்சி நிர்வாகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுடன் முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார்.
பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக் கூட்டத்தில் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்து அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுவது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
பள்ளிக் கட்டடங்களில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என நம்பிக் கொண்டுள்ளேன். அரசுத் துறையுடன் மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலை உருவாக்க வேண்டும்.
24 மணி நேரமும் அவசர உதவி மையங்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டும் சூழலில் குறைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகையிலும் கவனம் எடுத்து செயல்பட்டால் துயரை ஓரளவுக்கு குறைக்க முடியும்.
ஆலோசனைகளை ஆலோசனைக் கூட்டங்களில் மட்டுமல்லாமல் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பணிகளை முடிக்க வேண்டும்.
இந்த முறை சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என ஓரளவிற்கு நம்பிக் கொண்டுள்ளேன். எதிர்பார்க்கிறேன். தேங்காது என்ற நினைப்போடு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.
குடியிருப்பு சங்கங்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவலை பெறுவதுடன், தனியார் வானிலை ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் தரும் தரவுகளையும் ஒப்பிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.








