புதுக்கோட்டையில் கால் நடை பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கால்நடை பண்ணையில் தமிழக மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மையநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கால் நடை பண்ணையில் எவ்வளவு கால் நடை வளர்க்கப்படுகிறது, மாட்டு தீவனம் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது, என்பது குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது;ஜல்லிக்கட்டில் ஆன்லைன் முறை என்பது அரசாணை இல்லை, சில இடங்களில் நிர்வாக காரணங்களுக்காக ஆன்லைன் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண உதவித்தொகை முதலமைச்சரின் அறிவுரைப்படி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரோ மூலம் புதிய டிரான்ஸ்மீட்டர் செயல்பாட்டை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். விரைவில் தமிழக மீனவர்கள் அனைவருக்கும் வாக்கி டாக்கி வழங்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளில் 40 படகுகள் மட்டுமே மீண்டும் கொண்டுவரக்கூடிய அளவில் தகுதி வாய்ந்ததாக உள்ளது. அதனை கூடுதலாக இழப்பீடு தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கால்நடை துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கான பணியை நிரப்புவும், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்தளத்தில் மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆவின் நிறுவனத்திற்கு குறைவாக சப்ளை செய்யப்படுவதில்லை, முறையாக தான் சப்ளை செய்யப்படுகிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையவில்லை தீவனங்கள் உற்பத்தியில் சுணக்கம் உள்ளதாக தெரிவித்தார்.
-ம. ஶ்ரீ மரகதம்