“#GOAT திரைப்படத்திற்காக முதன்முறையாக…” – பத்ரிநாத் நெகிழ்ச்சி!

கோட் திரைப்படத்திற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான பத்ரிநாத் தெரிவித்துள்ளார். விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All…

கோட் திரைப்படத்திற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் (செப். 5) வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் கடந்த 2-ம் தேதி வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான பத்ரிநாத் கோட் திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “நான் முதன்முறையாக ஒரு திரைப்படத்தின் பாகமாக மிகவும் உற்சாகமாக GOAT திரைப்படத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.