மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில்- 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபா பிரையன் லாரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்ந அணி நிர்யணிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 , பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 6 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 21 ரன்னில் வெளியேறினார்.அறிமுக போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 39 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 , சஞ்சு சாம்சன் 12 ரன் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி திரில் வெற்றி பெற்றது.






