கரூரில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

கரூர் மற்றும் பரமத்தி வேலூரில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்” அலுவலகம் மற்றும் அம்பாள்…

கரூர் மற்றும் பரமத்தி வேலூரில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர்
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்”
அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில்
நேற்று காலை 9 மணி அளவில் அமலாக்கத்துறை  அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். மாலை 6 மணி வரை தொடர்ந்து, 8 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்துக் கொண்டு சில ஆவணங்களை இரண்டு பைகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இதேபோல், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த
பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற டைல்ஸ் கடை மற்றும்
அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு
இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்த இன்றும் நடைபெற்று
வருகிறது , துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன்
நேற்று இரவிலும் தொடர்ந்த சோதனை  இன்றும்  நடைபெற்று வருகிறது  இந்த சோதனையின் இடையே டைல்ஸ் ஷோரூமுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் அதிகாரிகள் சில ஆவணங்களை நகல் எடுத்தனர்.
நாமக்கல்  அடுத்த பரமத்திவேலூரில்  சக்கரா நகர், ராஜாஜி தெருவில் உள்ள டயர் மணி என்கிற காளியப்பன் என்பவரின் வீட்டில் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 வது நாளாக் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான பழைய பைபாஸ் சாலையில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.டயர் மணி (எ) காளியப்பன்   வேடசந்தூரை சேர்ந்த  சாமிநாதன் என்பவரின் உறவினர். சாமிநாதன் வீட்டில் கடந்த 2 ம் தேதி அமலாக்கத்துறை சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.