சென்னை மணலியில் கொசு விரட்டும் லிக்விட் மிஷின் எரிந்து மூச்சு திணறல் ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
மணலி எம் எம் டி ஏ இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் உடையார். -ஜொமோட்டோ (zomato) ஊழியரான இவர், இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது காலில் அடிபட்டு கே எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை கவனித்துக் கொள்வற்காக அவரது மனைவி செல்வி மருத்துவமனையில் உள்ளார்.
இந்த தம்பதியின் இரு குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக செல்வியின் தாய் சந்தான லட்சுமி ஊரிலிருந்து வந்துள்ளார். அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் என்பதால் கொசு விரட்டும் லிக்விட் மிஷினை பயன்படுத்தி உள்ளார்.
அந்த மிஷின் சூடாகி உருகி அருகில் இருந்த அட்டைப்பட்டியின் மீது விழுந்துள்ளது. அதிலிருந்து அதிக அளவில் புகை வெளியேறி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த செல்வியின் 3 குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகிய நான்கு பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
பின்னர் அங்கு சென்ற மாதவரம் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழககுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







