திரைப்பட இயக்குனர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு எதிர்பாராதவிதமாக நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சித்திக் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 69. இயக்குனர் சித்திக் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர் விஜய் நடித்த பிரெண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.



