எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தேர்வாகவும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 27.30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் 10,11 & 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள் எனவும், பொதுத்தேர்வு பார்த்து ஒரு டென்ஷனும் வேண்டாம் எந்த ஒரு பயமும் வேண்டாம். பொதுத்தேர்வில் எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் வரப்போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னம்பிக்கையும் மன உறுதியும் தான் தேவையானது. அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள். தேர்வு என்பது மாணவர்களை பரிசோதிக்க அல்ல.அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு. உயர்த்தி விடுவதற்கு. எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்றார்.
மேலும், தேர்வை பார்த்து பயம் வேண்டாம் பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை முழுமையா தெளிவா எழுதுங்கள். நிச்சயமா வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் போல நானும் உங்கள் வெற்றிக்காக காத்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக வாழ்த்துகிறேன் ஆல் தி பெஸ்ட் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.