தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, ஜூலை 2-ஆம் தேதி தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர 2,28 லட்சத்திற்கு மேற்பட்டோர் ஆன் லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கான விண்ணப்பதிவு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 17,129 விண்ணப்பங்கள் கூடுதலாக வந்துள்ளன. இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணிகள் இணையவழியில் ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தொடா்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.