இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது.
குரூப் 2 ஏ பிரிவின் கீழ் வரும் 4 செயல் அலுவலர் பணியிடங்களுக்கு, பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏப்ரல் 23 மற்றும் 24 தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுள்ளது. மேலும், இந்துக்கள் மட்டும் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை தணிக்கைப் பிரிவில் 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கும் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் TNPSC தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு தாளும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுள்ளது.








