31.9 C
Chennai
June 24, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி” – ராகுல் காந்தி!

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கருப்புப் பெட்டி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும்நிலையில், அவை ஒரு கருப்புப் பெட்டி என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஆராய யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை. நிறுவனங்கள் பொறுப்புக் கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும், அவற்றை அகற்ற வேண்டும் என எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading