நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையை வரும் எடப்பாடி பழனிசாமி வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை வரும் 7-ம் தேதி தொடங்குவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 7-ம் தேதி சிவகாசி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடியிலும், பிப்ரவரி 8-ம் தேதி – மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் திருச்சியிலும் பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 10-ம் தேதி – வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளிலும், பிப்ரவரி 11-ம் தேதி – வடசென்னை, தென்சென்னை, சென்னை புறநகர் பகுதிகளிலும், பிப்ரவரி 14-ம் தேதி கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டிலும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







