ஜப்பானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு!

ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான நிலையில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தால் அதிகாலை வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் இபாரகி, ஷிபா, சைடமா ஆகிய நகரங்களில் மொத்தம் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.