சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 60 க்கு விற்பனையாகிறது.
அசானி புயல் மற்றும் தொடர் பருவமழையின் காரணமாக ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் மழை பெய்ததன் எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து குறைந்த காரணத்தினால் விலை கிலோ ஒன்றுக்கு 120 வரை உயர்ந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்றுக்கு ரூ.120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை 40 ரூபாய் அதிரடியாக குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மக்கள் சிரமத்தை அறிந்து கூட்டுறவுத் துறை சார்பிலும் தக்காளி கிலோ ஒன்றுக்கு 79 ரூபாய் அளவில் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தக்காளி என்பது விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே தக்காளி மற்றும் பிற காய்கறிகளின் விலை ஏற்றம் என்பது இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தக்காளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி சில்லரை கடைகளில் 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.