காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க…: அரசியல் சரவெடியை கொளுத்திய நடிகர் விஜய்!

தேர்தலில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட  வேண்டாம் என பெற்றோரிடம் எடுத்து சொல்லுங்கள் என மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.  தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு…

தேர்தலில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட  வேண்டாம் என பெற்றோரிடம் எடுத்து சொல்லுங்கள் என மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். 
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விஜய் பேசியதாவது:
அடுத்து நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்த நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நம் கையை  வைத்து நம்மை குத்திக் கொள்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவது. ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால், ஒருவர் 15 கோடி செலவு செய்தால், அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
இந்த கல்வி முறையில் நான் கற்றுக் கொடுக்க நினைப்பது, மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இது ஒரு முயற்சி தான்.  செய்து பார்க்கலாம். நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்கள் முதல் தலைமுறை வாக்களார்கள்.
தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுடன்  பேசுங்கள். உடன் இருங்கள். நீங்கள் கொடுக்கும் தைரியத்தில்  தோல்வி அடைந்த மாணவர்கள் வெற்றி அடைந்தால் அதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. தோல்வி  அடைந்தவர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அதே போல் மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவு எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தைரியமாக நீங்கள்  நினைப்பதை முன்னெடுத்து செய்யுங்கள், உன்னால் முடியாது என்று சொல்வார்கள்,  உங்களுக்குள்  இருப்பவர்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள்.
இவ்வாறு நடிகர் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.