ரூ.8,000 கோடி நன்கொடை! மருத்துவ கல்லூரிக்கு வழங்கிய முன்னாள் பேராசிரியை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

அமெரிக்காவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரிக்கு $1 பில்லியன்  அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையை ரூத் எல். கோட்டஸ்மேன் என்ற ஓய்வு பெற்ற பேராசிரியை வழங்கியது…

அமெரிக்காவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரிக்கு $1 பில்லியன்  அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையை ரூத் எல். கோட்டஸ்மேன் என்ற ஓய்வு பெற்ற பேராசிரியை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மான்டிஃபியோர் மருத்துவ மையம்,  நியூயார்க்கின் பிராங்க்ஸில் அமைந்துள்ளது.  இந்த கல்லூரி 1953 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டில் 56 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் படிக்கும் மாணவர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவனத்தின் பொருளாளர் திடீரென அறிவித்தார்.  கல்லூரியில் சேரும் போது இனி கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதை அறிந்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கையில் இருந்து குதித்தும்,  ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவனத்தின் பொருளாளர் கூறியதாவது :

“ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறங்காவலர் குழுவின் தலைவரும்,  மான்டிஃபியோர் ஹெல்த் சிஸ்டத்தின் குழு உறுப்பினருமான ரூத் கோட்ஸ்மேன் மொத்தமாக $1 பில்லியன் ( இந்தியா மதிப்பில் சுமார் ரூ. 8000  கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளார்.  இந்த நன்கொடை மூலம் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.  தற்போதைய நான்காம் ஆண்டு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்லூரி கட்டணம் திருப்பி வழங்கப்படும்.  மேலும், இனி வரும் காலங்களில் இந்த கல்லூரில் படிக்க வரும் மாணவர்கள் கல்லூரி கட்டணம் இன்றி படிக்கலாம்”

யார் இந்த ரூத் எல். கோட்டஸ்மேன்?

ரூத் எல் கோட்டஸ்மேன் (93) மருத்துவக் கல்வியின் நிலப்பரப்பில் தனது கடும் உழைப்பால் அழியாத முத்திரையை பதித்துள்ளார்.  ஐன்ஸ்டீனில் குழந்தை மருத்துவத்தின் முன்னாள் மருத்துவப் பேராசிரியராகவும்,  மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு இணையற்றது.  இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

அவரது மறைந்த கணவருடன்,  கோட்ஸ்மேன்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியில் நீண்டகாலமாக சேவையாற்றி வருகிறார்.  மேலும் இந்த நினைவுச் சின்ன பரிசு அவர்களின் தாராள மனப்பான்மை மற்றும் கருணையின் நீடித்த மரபுக்கு ஒரு சான்றாக உள்ளது.  டாக்டர். கோட்ஸ்மேன் 1968 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனின் குழந்தைகள் மதிப்பீடு மற்றும் மறுவாழ்வு மையத்தில் (CERC) சேர்ந்ததிலிருந்து கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.