ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திமுக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்தனர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதேபோல் நேற்று டெல்லி ராஜ்காட் பகுதியில் ராகுல்காந்திக்கு ஆதரவாக காங்கிரசார் சங்கல்ப உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும், நாடு முழுவது ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டத்தை கண்டித்து ரயில்மறிப்பு போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.