திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறும் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், சமீபத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் மூழ்கி சேதமடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியதாவது,
“சமீபத்தில் பெய்த பெருமழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு ஒரு முறைக்கு பலமுறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. மழை காரணமாக அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மற்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறும்.” என்றும் கூறினார்.