ஹாங்காங் – சென்னை இடையே மீண்டும் தொடங்கிய நேரடி விமான சேவை!

ஹாங்காங் – சென்னை இடையே நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை இன்று மீண்டும் (பிப்.2) தொடங்கியது.  சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு ‘கேத்தே’ பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி…

ஹாங்காங் – சென்னை இடையே நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை இன்று மீண்டும் (பிப்.2) தொடங்கியது. 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு ‘கேத்தே’ பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம்  உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து இயல்பு நிலைக்கு  திரும்பிய நிலையில், சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன.  ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.  ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் விமான சேவையை இன்று (பிப்.2) தொடங்கியுள்ளது.

இந்த விமான சேவை தொடங்கியது,  தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  மேலும், சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.