தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகளவில் 32 கோடி ரூபாயை கடந்து பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் தனுசின் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர். இவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுசுடன் திருச்சிற்றம்பலம் படத்துடன் கைகோர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனிருத் மற்றும் தனுஷ் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருந்தனர்.
சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனுசின் தொடர் படங்கள் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், திருச்சிற்றம்பலம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது.
இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் தனுசுககு ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் மூன்று நாட்களில் 23 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளது. மேலும் உலக அளவில் இந்த படம் 32 கோடி ரூபாயை கடந்து பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
உணவு டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் மற்றும் அவரது தோழியாக நித்யா மேனன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களை அதிக அளவு ஈர்த்துள்ளதாகவும், பழைய படங்களில் நடித்த தனுசை இந்த படத்தில் பார்க்க முடிந்ததாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்








