சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம்  கோவில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி…

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்  கோவில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி  வழங்கப்படும். இந்நிலையில் மாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு மார்ச் மாதம் 19.3.23 முதல். 22.3.23 வரை நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி, காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.