முக்கியச் செய்திகள் இந்தியா

முகம்மது நபி குறித்த சர்ச்சை பேச்சு – நுபுர் ஷர்மா உள்பட மூவர் மீது வழக்குப் பதிவு

முகம்மது நபி குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா உள்ளிட்ட மூவர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் இறை தூதரான முகம்மது நபி குறித்து, பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக புகார் எழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல், பாஜக டெல்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, பாஜகவில் இருந்து நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். நவீன் ஜிண்டால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல்களும், பாலியல் அச்சுறுத்தல்களும் வந்ததை அடுத்து, அவருக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

இந்நிலையில் நுபுர் ஷர்மா மற்றும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டவர்கள், எதிர் தாக்குதல் நடத்தியவர்கள் என பலர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால், பத்திரிகையாளர் சபா நக்வி, ஷதாப் சவுகான், மெளலானா முஃப்தி நதீம், அப்துர் ரகுமான், குல்சர் அன்சாரி, அனில் குமார் மீனா ஆகியோருக்கு எதிராக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

டெல்லி காவல்துறையின் IFSO பிரிவு சார்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி துணை ஆணையர் கே.பி.எஸ். மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டும் என்றே தவறான தகவல்கள் பரப்பப்படுவதில் சமூக ஊடகங்களுக்கு உள்ள பங்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஊழல் குற்றச்சாட்டில் நெடுஞ்சாலைதுறை பொறியாளர் சஸ்பென்ட்

Web Editor

விளாத்திகுளத்தில் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

Arivazhagan Chinnasamy

சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்

Web Editor