கடந்த மாதம் ரத்து செய்யப்பட்ட ஆம் ஆத்மி அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
டெல்லியில் உள்ள மணீஷ் சிசோடியாவின் வீட்டைத் தவிர, ஏழு மாநிலங்களில் உள்ள 20 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. தில்லி முன்னாள் கலால் ஆணையர் கோபிகிருஷ்ணாவின் டாமன் மற்றும் டையூவில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு நவம்பரில் ஆம் ஆத்மி அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய டெல்லி கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் கீழ் மதுபானக் கடை உரிமங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக,மணீஷ் சிசோடியா இன்று காலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சிபிஐ அதிகாரிகள் இங்கே எனது இல்லத்தில் உள்ளனர். விசாரணை நிறுவனத்திற்கு நான் ஒத்துழைப்பேன், அவர்கள் எனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
“சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் டெல்லி அரசு செய்துள்ள சிறப்பான பணிகள் செய்து வருகிறது. அதனால்தான் இரு துறைகளின் அமைச்சர்களும் குறிவைக்கப்பட்டிருப்பதாக சிசோடியா கூறினார்.
டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த மே மாதம் முதல் சிறையில் உள்ளார்.
“சிபிஐ அமைப்பை வரவேற்கிறோம். முழு ஒத்துழைப்பு அளிப்போம். கடந்த காலங்களிலும் பல சோதனைகள்/ரெய்டுகள் நடந்துள்ளன. எதுவும் வெளிவரவில்லை” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.