80 அடி கிணறு; சத்தீஸ்கரில் 5 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவன்

80 அடி கிணற்றில் விழுந்து சிறுவன் ஐந்து நாட்கள், பாம்பு மற்றும் தவளைகளுடன் இருந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிஹ்ரித் கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த…

80 அடி கிணற்றில் விழுந்து சிறுவன் ஐந்து நாட்கள், பாம்பு மற்றும் தவளைகளுடன் இருந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஹ்ரித் கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராகுல் சாஹு, சிறுவன் வெகு நேரமாக வீடு திரும்பாததை உணர்ந்த பெற்றோர், சிறுவனைப் பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர். அப்போது தான் அந்தச்சிறுவன் 120 அடிக்குப் போடப்பட்ட போரில் விழுந்தது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துக் கிடைத்த தவலின் பேரில் போலீசாரும் , தீயணைப்புத் துறையினரும் நேரில் சென்று மீட்புப் பணியைத் தொடங்கினர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்ததும் ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் , வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு , சிறுவனுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரோபோட்டிக் உபகரணங்கள் மற்றும் அதி நவீன கருவிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வி அடைந்தது.

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா’

தொடர்ந்து, ஆழ்துளைக் கிணற்றின் மிக அருகிலேயே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. தனியார் நிறுவனங்களின் உதவியுடன் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக 110 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். சிறுவனை மீட்ட குழுவினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்று, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ராகுலைச் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இந்நிலையில் அந்த சிறுவனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் , ராகுல் உயிர் பிழைக்க இறைவனிடம் வேண்டிய அனைவருக்கும் அம்மாநில முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். சிறுவன் மீட்கப்பட்ட சம்பவம், “இன்று சத்தீஸ்கர் முழுவதும் கொண்டாடப்படுகிறது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும், “அவர் விரைவில் மருத்துவமனையிலிருந்து திரும்ப வேண்டும் என்று அனைவரும் விரும்புவதாகவும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து குழுவிற்கும் மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்” எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, சிறுவனின் மருத்துவச் சிகிச்சை மற்றும் கல்வியை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.