லால்குடியில் உள்ள எல். அபிஷேகபுரத்தில் அரசியல் பிரமுகரின் வீட்டிற்குள் புகுந்த சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரிய வகை பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தை சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது
வீட்டில் நேற்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ் சிவப்பு நிறம் கொண்ட
கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரிய வகை பாம்பு இருந்தது தெறிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த லலால்குடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரியவகை .பாம்பை சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் உயிருடன் பிடித்தனர். இதனை தொடர்ந்து
தச்சங்குறிச்சி வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.
ம. ஸ்ரீ மரகதம்







