புயல் எச்சரிக்கை – அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவை மிரட்ட வரும் தாழ்வு மண்டலம்!

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஒடிசா கடற்கரைக்கு அருகே, வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கேரளாவில் வரும் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இன்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை ஆகஸ்ட் 28 அன்று திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

ஒரு கனமழை என்பது 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழைப்பொழிவைக் குறிக்கும்.

மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கேரள கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வானிலை அறிக்கைகளை தொடர்ந்து கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.