சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் கடந்த 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றைய போட்டி நடைபெறுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து இன்றை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.