முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்க மாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 252 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,385 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,469 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தொற்றுக்கு 3,09,575 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 81,85,13,827 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 96,46,778 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

Arivazhagan Chinnasamy

ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்

G SaravanaKumar

திகில், மர்மம், தொல்லியல்.. ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ஷூட்டிங் நிறைவு

Gayathri Venkatesan