கோரமண்டல் ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 இன்று மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நாளை மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும்.

இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒரிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது.

இந்த விபத்தில் 132 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ஒடிசா மாநில அரசின் முதன்மை செயலாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது. கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர அழைப்பு சேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

https://twitter.com/AshwiniVaishnaw/status/1664676130408878080

இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

ரயில் விபத்து – அவசர எண்கள் அறிவிப்பு : 

ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது; அதன்படி விபத்து தொடர்பான விபரங்களுக்கு

044-25354771, 044-25330953, 044-25330952 எண்ணை தொடர்பு கொள்ளலாம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.