காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பெகாசஸ் விவகாரம், வேளாண்சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இயங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளான இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.