2024 தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முக்கிய குழுக்களை அமைத்துள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட சிந்தன் சிவிர் மாநாடு உதய்ப்பூரில் அண்மையில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் ராகுல் காந்தி யாத்திரை செல்ல முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கே சீட், ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற முக்கிய முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் குழுக்களை அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதன்படி, அரசியல் விவகாரங்கள் குழுவில் ராகுல் காந்தி , மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், ஜிதேந்திர சிங் ஆகிய 8 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிப்பார்.
“டாஸ்க் போர்ஸ் 2024” குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, சுனில் உள்ளிட்டோர் உள்ளனர். இக்குழுவில் ஒவ்வொருவருக்கும் கட்சி ரீதியிலான பணிகள், ஊடகத்தை தொடர்பு கொள்ளுதல், நிதி மற்றும் தேர்தல் மேலாண்மை உள்ளிட்ட பொறுப்புகள் அளிக்கப்படவுள்ளன.
இதேபோல நாடு முழுவதும் பாத யாத்திரை செல்வதற்கான பாரத ஜோடோ யாத்திரையை ஒருங்கிணைப்பு குழுவில் திக் விஜய் சிங், சச்சின் பைலட், சசி தரூர், ஜோதிமணி உள்ளிட்ட 9 பேர் கொண்ட இடம்பெற்றுள்ளனர்.
3 குழுக்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப.சிதம்பரம், கரூர் எம்.பி ஜோதிமணி ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் கனுகொலு இடம்பெற்றுள்ளார்.